தூத்துக்குடியில் தேர்தல் பணியாற்றும் காவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆலோசனைக் கூட்டம்
Mar 9 2021 3:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டத்தில், தேர்தல் பணியாற்றும் காவலர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள 2 ஆயிரத்து 800 போலீசாரில், 900 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும், மற்ற காவல்துறையினரும் தைரியமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.