வாக்களிப்பதன் அவசியம் குறித்து பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
Mar 9 2021 3:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சட்டமன்றத் தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மகளிர் சுய உதவிக் குழுவினர்கள் மூலம் கோலப்போட்டிகள், கல்லூரி மாணவர்களுக்கிடையே கட்டுரைப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், பொதுமக்களிடையே கையெழுத்து பிரச்சாரங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.