சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி திருவள்ளூரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
Mar 9 2021 3:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, திருவள்ளூரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான திரு.பா. பொன்னையா தொடங்கி வைத்தார். 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பிரசுரங்களை வழங்கினார்.