அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகியது தே.மு.தி.க. - சட்டமன்ற தேர்தலில் கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் விலகுவதாக அறிவிப்பு
Mar 9 2021 1:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தொகுதி எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்படாததால் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து தே.மு.தி.க. வெளியேறுவதாக அக்கட்சித் தலைவர் திரு.விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் நாளுக்கு நாள் விறுவிறுப்பு அடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் எடப்பாடி தரப்பு கூட்டணியில் இன்னமும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடியாததால் அங்கு பெரும் குழப்பம் நிலவுகிறது. தொகுதி எண்ணிக்கையில் தே.மு.தி.க கடும் அதிருப்தியில் இருந்த நிலையில், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சி தலைவர் விஜயகாந்த் எடுக்கும் முடிவை ஏற்பது என இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில், அ.தி.மு.க கூட்டணியிலிருந்து தே.மு.தி.க விலகுவதாக திரு.விஜயகாந்த் அறிவித்தார். தே.மு.தி.க கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுக்கப்படாததால் வெளியேறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.