வன்னியர்களுக்கு 10 புள்ளி 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட்டம் - தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
Mar 9 2021 5:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வன்னியர்களுக்கு 10 புள்ளி 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இச்சட்டத்திற்கு எதிராக திண்டுக்கல்லை சேர்ந்த விஜயகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், போதுமான ஆதாரங்கள் இல்லாமல், இந்தச் சட்டத்திற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், இம்மனு மீது 8 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.