பாகிஸ்தானுக்கு எதிராக 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி
Mar 9 2021 1:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானுக்கு எதிராக 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியாவின் வெற்றி மற்றும் வீரர்களின் தியாகத்தை கெளரவிக்கும் வகையில், குன்னூரில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டரின் போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், உயிரிழந்த வீரர்களுக்கு, பேண்ட் வாத்தியம் முழங்க, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. வெலிங்டன் ராணுவ பாதுகாப்பு சேவை பணியாளர்கள், கல்லூரி லெப்டினன்ட் ஜெனரல் எம்.ஜே.எஸ்.கலோன், வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டர் ராஜேஷ்வர் சிங் உள்ளிட்ட ராணுவ உயரதிகாரிகள், நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.