ஸ்ரீவில்லிபுத்தூரில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
Mar 9 2021 1:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூரில் 70 கிலோமீட்டர் தூரத்திற்கு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரசு அதிகாரிகள் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கியது. இதில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.