கன்னியாகுமரியில் கோடை மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
Mar 9 2021 1:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த வாரங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், இன்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆற்றூர், குலசேகரம், பேச்சிபாறை, நாகர்கோவிலில் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக பேச்சிபாறையில் 19 மில்லிமீட்டர் மழையும், நாகர்கோவிலில் 16 மில்லிமீட்டர் மழையும், சிற்றார் பகுதியில் 12 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியது.