தமிழ் மொழி காக்க தங்களின் இன்னுயிர் நீத்த மொழிப் போர் தியாகிகளுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அ.ம.மு.க. சார்பில் நிர்வாகிகள் மரியாதை

Jan 25 2021 6:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழ் மொழி காக்க தங்களின் இன்னுயிர் நீத்த மொழிப் போர் தியாகிகளுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அம்மா முன்னேற்றக் கழகம் சார்பில் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்கநாளினை முன்னிட்டு மதுரை மாநகர் புறநகர் மாவட்ட கழக மாணவரணி சார்பில் தமுக்கம் பகுதியிலுள்ள தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவரணி மாவட்ட செயலாளர்கள் திரு. வரதராஜன், திரு.சிக்கந்தர் , திரு.அறிவழகன், திரு.சக்திவேல் ஆகியோர் தலைமையில் ஏராளமான மாணவர்கள் மற்றும் கழகத்தினர் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர். தலைமை நிலைய செயலாளர் திரு. கே.கே.உமாதேவன், எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் திரு.டேவிட் அண்ணாத்துரை, அம்மா பேரவை செயலாளர் திரு.மாரியப்பன் கென்னடி, மாவட்ட செயலாளர்கள் பேராசியர் மா.ஜெயபால், திரு. ஷ.ராஜலிங்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தருமபுரி மாவட்ட கழகத்தின் சர்பில் தர்மபுரி பெரியார் சிலை அருகே நடைபெற்ற வீரவணக்கநாள் நிகழ்வையொட்டி மொழிப் போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக துணை பொதுச்செயலாளரும் தருமபுரி வடக்கு மாவட்ட செயலாளருமான திரு.பி.பழனியப்பன் பங்கேற்று மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைசெயலாளரும் கழக ஆட்சி மன்ற குழு தலைவருமான அரூர்.திருRR முருகன், தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் திரு.DK ராஜேந்திரன் எம்.ஜிஆர் மன்ற மாநில துணைத்தலைவர் திரு.ஆர்.பாலு உள்ளிட்ட கழகத்தினர் கலந்துகொண்டனர்.

கடலூர் மேற்கு மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள மொழிப்போர் தியாகி திரு.இராஜேந்திரன் திருவுருவ சிலைக்கு மேற்கு மாவட்ட கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அமைப்புச் செயலாளரும் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான திரு. கே.எஸ்.கே.பாலமுருகன் தலைமையில் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

அரியலூர் மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் திரு.துரை.மணிவேல் தலைமையில் கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் திரு. சின்னச்சாமி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் ஜெயராமன், மாவட்ட மாணவரணி செயலாளர் திரு. விஜயகாந்த், கழக பாசறை செயலாளர் சிவா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மொழிப்போர் தியாகிகள் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி வீர அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட மாணவரணி செயலாளர் திரு. ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட செயலாளர் திரு. எஸ்.கார்த்திகேயன் மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினார். மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் திரு. குலோத்துங்கன், மாநில மகளிரணி துணை தலைவர் திருமதி. மைதிலி கோபிநாத் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00