வாகன காப்பீடு மோசடி சம்பவத்தில் 6 பேர் கொண்ட கும்பல் கைது - சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தகவல்
Jan 25 2021 6:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வாகன காப்பீடு மோசடி சம்பவத்தில் 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சென்னை காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 54 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் 3 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், லேப்டாப், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.