தியாகத்தலைவி சின்னம்மா, பூரண உடல்நலம் பெற்று, நீண்ட ஆயுளுடன், சிறப்பாக வாழ வேண்டி, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.
தென் சென்னை கிழக்கு மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு சார்பில், அண்ணா சாலை தர்காவில் ஜியாரத் பாத்தியா செய்யப்பட்டது. கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. செந்தமிழன், மாவட்டக் கழகச் செயலாளர் நீலாங்கரை திரு. எம்.சி. முனுசாமி தலைமையில், மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் திரு. ஜிம். பாஷா ஏற்பாட்டின் பேரில், சிறப்பு கூட்டு பிராத்தனையான ஜியாரத் பாத்தியா மற்றும் சிறப்பு துவா செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கழக சிறுபான்மையினர் நல அணி மாநில இணைச் செயலாளர் திரு. எஸ்.எம். ஜோ, மத்திய கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு. ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூ நகர கழகம் சார்பில், அனகாபுத்தூரில் உள்ள ஸ்ரீ அயோதியம்மன் கோவிலில், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நகர செயலாளர் திரு. பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாட்டில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நகர அவைத் தலைவர் திரு. கேசவன், இணைச் செயலாளர் திரு. ஆனந்தன், எம்.ஜி.ஆர். மாவட்ட துணைத் தலைவர் திரு. பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், மேல வல்லம் திரௌபதி அம்மன் ஆலயத்தில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் திரு. செந்தமிழன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொள்ளிடம் ஒன்றிய கழக செயலாளர் திரு. பாரிவள்ளல் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஈரோடு புறநகர் மாவட்டம் சலங்கபாளையம் பேரூர் கழகம் சார்பில், செந்தாம்பாளையம் மாரியம்மன் கோவிலில், சிறப்பு பூஜை நடத்தி, சின்னம்மா விரைவில் பூரண குணமடைய வேண்டி, அவரது பெயருக்கு அர்ச்சனை செய்து கழக நிர்வாகிகள் வழிபட்டனர். மாநில கழக அமைப்பு செயலாளர் திரு. பி.ஜி. நாராயணன், சலங்கபாளையம் பேரூர் கழக செயலாளர் திரு. குணசேகரன், மாவட்ட கழக மருத்துவ அணி துணைத் தலைவர் டாக்டர். முத்துசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை மத்திய மாவட்டம் கலசபாக்கம் கிழக்கு ஒன்றியம் சார்பில், பருவதமலை அடிவாரத்தில் உள்ள வனதுர்கை அம்மன் கோயிலில், 50 லிட்டர் பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. பொதுக்குழு உறுப்பினர் திரு. சி.வெங்கடேசன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் திரு. சி. விஜயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.