இலவச மடிக்கணினி வழங்கக் கோரி திருச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டம்
Jan 25 2021 4:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலவச மடிக்கணினியை மூன்று ஆண்டுகளாக வழங்காமல் காலம் தாழ்த்திவரும் தமிழக அரசை கண்டித்து, திருச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள், தமிழக அரசு உடனடியாக தங்களுக்கு இலவச மடிக்கணினியை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.