சின்னம்மா நலம் பெற வேண்டி தொடர் வழிபாடு - திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், தூத்துக்‍குடி, காஞ்சிபுரம், நெல்லையில் கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்

Jan 25 2021 4:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

தியாகத்தலைவி சின்னம்மா, பூரண உடல்நலம் பெற்று, நீண்ட ஆயுளுடன், சிறப்பாக வாழ வேண்டி, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.

வட சென்னை கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் மேற்கு பகுதி கழகம் சார்பில், மணலியில் உள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோயிலில், 108 தேங்காய்கள் உடைத்து வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு சி.பி. ராமஜெயம், திருவெற்றியூர் மேற்கு பகுதி கழக செயலாளர் திரு. கே.ஏ. குப்பன், மாவட்ட இணைச் செயலாளர் திரு. ஜெ. மதிவதனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் உள்ள காளியம்மன் ஆலயத்தில், தாம்பரம் நகரக் கழகச் செயலாளர் திரு. N. கிருஷ்ணமூர்த்தி தலைமையில், செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. ம. கரிகாலன் கலந்துகொண்டு, சின்னம்மா நீடூடி வாழ வேண்டி சிறப்பு அபிஷேகம் பூஜைகள் செய்து வழிபட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தாம்பரம் நகர கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

விழுப்புரம் தெற்கு மாவட்டம் கோலியனூர் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில், கோலியனூரில் அமைந்துள்ள புத்துவாயம்மன் கோயிலில், புத்துவாயம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோலியனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு. சரவணன், மாவட்ட அவைத்தலைவர் திரு. மெடிக்கல் ராஜி, வளவனூர் நகர செயலாளர் திரு. குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி நகரக்‍ கழகம் சார்பில் ஏமப்பேரில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காசி விஸ்வநாதருக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. கோமுகி மணியன், நகர செயலாளர் திரு. ஜெயப்பிரகாஷ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு. பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் காயல்பட்டணம் நகரக்‍ கழகம் சார்பில், நகர செயலாளர் திரு. யாசின் தலைமையில், காயல் பட்டணம் தைக்கா தெருவில் அமைந்துள்ள புனித தைக்கா சாஹிபு வலியுல்லாஹ் தர்காவில் வைத்து கூட்டு துவா பிராத்தனை பெற்றது. இதில் மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் .லெனின் மாவட்ட துணைச்செயலாளர் பார்த்திமா, நகர கழக இணைச் செயலாளர்கள் ஜுவைரியா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட உத்திரமேரூர் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில், சாலவாக்கம் ஸ்ரீ ஆனந்தவள்ளி சமேத சொர்ணபுரீசுவரர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அன்னதானதம் வழங்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் திரு. மொளச்சூர் இரா.பெருமாள் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு. ஆலஞ்சேரி இரா.கமலக்கண்ணன், சாலவாக்கம் ஊராட்சி கழக செயலாளர் திரு. செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தென்காசி தெற்கு மாவட்டக்‍ கழக குருவிகுளம் வடக்கு ஒன்றியம் சார்பில், வடபத்ரகாளியம்மன் திருக்கோவிலில், அம்மனுக்கு 111 திருவிளக்கு பூஜை செய்து அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. இதில், மாவட்டக் கழகச் செயலாளர் திரு. V. முருகையா பாண்டியன், மாவட்ட கழகப் பொருளாளர் திரு. ஜோதிராஜ், மாவட்ட கழக நிர்வாகிகள் திரு. சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00