சின்னம்மா, வரும் 27ம் தேதி விடுதலை - மருத்துவமனைக்கு சிறைத்துறையினர் நேரில் சென்று விடுவிப்பு சான்றிதழை வழங்க இருப்பதாக வழக்‍கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தகவல்

Jan 25 2021 4:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

சின்னம்மா சிகிச்சை பெற்று வரும் பெங்களூரு மருத்துவமனைக்‍கு, வரும் 27ம் தேதி பெங்களூரு சிறைத்துறை அதிகாரிகள் நேரில் சென்று, விடுவிப்பு சான்றிதழை சின்னம்மாவிடம் வழங்க இருப்பதாக, அவரது வழக்‍கறிஞர் திரு.செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக, பெங்ளூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சின்னம்மா சிகிச்சை பெற்று வருகிறார். சின்னம்மா வரும் 27ம் தேதி விடுதலையாகும் நிலையில், இதுகுறித்து பெங்களூரு சிறைத்துறை அதிகாரிகளை, அவரது வழக்‍கறிஞர் திரு.செந்தூர் பாண்டியன் இன்று சந்தித்து, தண்டனை நிறைவு சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்தை அளித்துள்ளார். இதையடுத்து, சட்டப்பூர்வ நடவடிக்‍கைகள் முடிவடைந்துள்ளதாகவும், வரும் புதன்கிழமை 27-ம் தேதி காலை 10 மணியளவில், உரிய சான்றிதழ்களுடன் சிறைத்துறை அதிகாரிகள் மருத்துவனைக்‍குச் சென்று, சின்னம்மாவிடம் விடுவிப்பு சான்றிதழை வழங்க இருப்பதாகவும், திரு.ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார். சின்னம்மா, வரும் 27-ம் தேதி விடுதலையானாலும், மருத்துவமனையிலிருந்து எப்போது சென்னை திரும்புவார் என்ற விவரம் பின்னர்தான் தெரியவரும்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00