தியாகத்தலைவி சின்னம்மா, பூரண உடல்நலம் பெற்று, நீண்ட ஆயுளுடன், சிறப்பாக வாழ வேண்டி, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.
மதுரை மாநகர் தெற்கு மாவட்ட 82-வது வட்ட கழகம் சார்பில், மாவட்டச் செயலாளர் திரு. ஷ. ராஜலிங்கம் தலைமையில், சிம்மக்கல் பகுதியில் உள்ள காளியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வட்டக் கழகச் செயலாளர் திரு. எஸ்.ஆர். கார்த்திக், பகுதி கழக செயலாளர் திரு. இரா. சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி வடக்கு மாவட்டக் கழகம் மற்றும் அந்தநல்லூர் ஒன்றிய கழகம் சார்பில், பழூர் ஸ்ரீ விசாலாட்சி உடனுறை ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயத்தில், தியாகத் தலைவி சின்னம்மா பூரண குணம் அடைய வேண்டி, திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. ஆர். மனோகரன் தலைமையில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. அந்தநல்லூர் ஒன்றிய கழக செயலாளர் சாத்தனூர் திரு. வாசு, மாவட்ட மீனவர் அணி செயலாளர் திரு. கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
விருதுநகர் கிழக்கு மாவட்டம் திருச்சுழி வடக்கு ஒன்றிய கழகம் சார்பில், திருச்சுழி துணைமாலை அம்மன் சமேத திருமேனிநாதர் திருக்கோவிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. கணேசன், மாவட்ட கழக பொருளாளர் திரு. சந்திரசேகர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் திரு. மணிகண்டன், செயற்குழு உறுப்பினர் ராமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் கிழக்கு மாவட்ட விருதுநகர் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில், ஒன்றிய செயலாளர் திரு. ஆறுமுகம் தலைமையில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்தினர். மாவட்ட அவைத் தலைவர் திரு. தர்மராஜ், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் திரு. பாலாஜி, மாவட்ட அம்மா தொழிற்சங்க செயலாளர் திரு. அண்ணாதுரை, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் திரு. ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட திமிரி ஒன்றிய கழக செயலாளர் திரு. என். ஜனார்த்தனம் தலைமையில், கலவை பகுதியில் உள்ள ஸ்ரீவள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில், தியாகத் தலைவி சின்னம்மா நலம்பெற வேண்டி, அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு. சேஸையா, மாவட்டக் கழக இணைச் செயலாளர் திரு. சுந்தர் ராமநாதன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு. குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.