தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
Jan 25 2021 1:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, தூத்துக்குடியில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற சைக்கிள் பேரணியில், மாவட்ட ஆட்சியர் திரு.செந்தில்ராஜ், காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் திரு.ஜெயசீலன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி எம்.ஜி.ஆர். பூங்கா முன்பு தொடங்கிய சைக்கிள் பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று நிறைவடைந்தது.