தூத்துக்குடியில் 5 கி.மீ. தூரத்தை 38 நிமிடங்களில் கடந்த 5 வயது சிறுவர்கள் : உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பு
Jan 25 2021 12:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் 5 வயதான இரு சிறுவர்கள் கைகளை இணைத்தபடி, 5 கிலோ மீட்டர் தூரத்தை 38 நிமிடங்களில் கடந்து, உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.
தூத்துக்குடியை சேர்ந்த 5 வயது சிறுவர்களான ஸ்ரீ வர்ஷன் , பவின் கிருஷ்ணா ஆகிய இருவரும், நோபல் வேர்ல்டு புக் ஆஃப் ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக கைகளை இனைத்தபடி ஐந்து கிலோமீட்டர் தூரம் ஓடினர். தூத்துக்குடி பிஎன்டி காலனியில் இருந்து மடத்துவிளை வரை சென்று மீண்டும் பிஎன்டி காலனி திரும்பிய அவர்கள், ஐந்து கிலோமீட்டர் தூரத்தை 38 நிமிடங்களில் கடந்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர். இந்த சாதனை சிறுவர்களுக்கு, ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.