மத்திய பா.ஜ.க., அரசு தமிழையும், தமிழக மக்களையும் மதிக்கவில்லை - தமிழக தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Jan 25 2021 10:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய பா.ஜ.க., அரசு தமிழையும், தமிழக மக்களையும் மதிக்கவில்லை திரு. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான திரு. ராகுல்காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று முன் தினம் கோவையில் நடைபெற்ற பிரச்சாரத்தைத் தொடர்ந்து, நேற்று ஈரோட்டில் பொதுமக்களைச் சந்தித்து பேசினார். அம்மாவட்டத்தின் ஊத்துக்குளி பகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பேசிய அவர், தமிழக மக்களின் குறைகளை கேட்கவே தமிழகத்திற்கு வந்துள்ளதாகவும், தனது கருத்தை தெரிவிக்க வரவில்லை என்றும் கூறினார்.
தமிழக மக்கள் மீது தனக்கு குடும்ப உறவு உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக அரசைக் கட்டுப்படுத்துவதன் மூலம், தமிழக மக்களை கட்டுப்படுத்திவிடலாம் என மத்திய அரசு நினைப்பது ஒருபோதும் நடக்காது என்றார். தமிழர்களை அவமதிப்பதை அனுமதிக்க மாட்டேன் என்றும் திரு ராகுல் காந்தி அப்போது கூறினார்.