பிரதமரும், முதலமைச்சரும் கொரோனா தடுப்பூசி போட்டு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் - காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாக்கூர் வலியுறுத்தல்
Jan 18 2021 8:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தடுப்பூசியை தாங்கள் முதலில் போட்டுக்கொண்டு, மற்ற நாட்டு தலைவர்கள் மக்களுக்கு நம்பிக்கை அளித்தது போல், பிரதமர் நரேந்திர மோதியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், தடுப்பூசி போட்டு மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டுமென காங்கிரஸ் எம்.பி. திரு.மாணிக் தாக்கூர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தடுப்பூசியால் எந்த பக்கவிளைவும் இல்லாத நிலையில் அர்ப்பணித்தால் தான், மக்களுக்கு தடுப்பூசி மீதான பயம் போகுமெனவும் தெரிவித்தார்.