மருத்துவக்‍ கலந்தாய்வுக்‍காக போலியான நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பிக்‍கப்பட்ட விவகாரம் - தலைமறைவான ராமநாதபுரம் மாணவி, பெங்களூருவில் கைது

Jan 18 2021 8:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

மருத்துவக்‍ கலந்தாய்வுக்‍காக போலியான நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பிக்‍கப்பட்ட விவகாரத்தில், தலைமறைவாக இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி, பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற மருத்துவக்‍ கலந்தாய்வில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்‍குடியைச் சேர்ந்த பல் மருத்துவர் பாலச்சந்திரன் என்பவரின் மகள் கலந்து கொண்டார். அந்த மாணவி நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் சரிபார்க்‍கப்பட்டபோது, அது, போலியான சான்றிதழ் என கண்டுபிடிக்‍கப்பட்டது. இந்த மோசடி அம்பலமானதும் தந்தையும், மகளும் தலைமறைவாகிவிட்டனர். இதனையடுத்து, மாணவியின் தந்தை டாக்‍டர் பாலசந்திரன், கடந்த 1-ம் தேதி சென்னையில் கைது செய்யப்பட்டார். தலைமறைவாகிவிட்ட மாணவியை தனிப்படை போலீசார், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கேரளாவிலும் தேடி வந்தனர்.

இந்நிலையில், பெங்களூருவில் மாணவி பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு விரைந்த தனிப்படை போலீசார் இன்று அவரை கைது செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00