திருப்பூர் மாநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் டாக்டர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவையொட்டி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
Jan 18 2021 7:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், டாக்டர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவையொட்டி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இடுவம்பாளையம் பகுதி கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், தலைமை நிலையச் செயலாளர் திரு. சி.சண்முகவேலு தலைமையில் மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ஜோதிமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, சிவசேனா கட்சியின் மாநில பொருளாளர் கலைமகள் பாண்டியன், அக்கட்சியில் இருந்து விலகி தன்னை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டார்.