கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
Jan 18 2021 7:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. அழுகிய நெற்பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள், உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். மழைநீரோடு கண்மாய் நீரும் வயல்களில் புகுந்ததால் பயிர்கள் முழுவதுமாக சேதமடைந்து வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.