திருவண்ணாமலையில் கடையில் இருந்து வாங்கி வந்த பலகாரங்களை சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழப்பு
Jan 18 2021 7:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, கடையில் இருந்து வாங்கி வந்த பலகாரங்களை சாப்பிட்ட, ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூலித்தொழிலாளியான பழனி என்பவரின் உறவினர்கள் வாங்கி வந்த இனிப்புகளை, அவரது மகள் ஹாசினி மற்றும் மகன் ஸ்ரீஹரி இருவரும் உண்டனர். சிறிது நேரத்தில் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு விழுந்துள்ளனர். இதையடுத்து, இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நிலையில், நேற்று ஹாசினியும், இன்று ஸ்ரீஹரியும் இறந்துள்ளனர்.