சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது
Jan 18 2021 7:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், 7 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த புகாரில், மதுரை ஐஜி அலுவலகத்தில் அலுவலராக பணி புரியும் காவலர் பாலாஜி என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த 7 வயது சிறுமியை, ஒரு வாரகாலமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின்படி, மகளிர் காவல்நிலைய போலீசார் பாலாஜியை கைது செய்துள்ளனர்.