தூத்துக்குடி அருகே குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழைநீர் - ஒரு வாரம் ஆகியும் மழை நீர் அகற்றப்படாததால் பொதுமக்கள் சாலை மறியல்
Jan 18 2021 7:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி அருகே, ஒரு வாரத்திற்கும் மேலாக, குடியிருப்புகளை சுற்றி தேங்கியுள்ள மழை நீரை அகற்றக்கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பூ பாண்டியபுரம் பகுதியில், குடியிருப்புகளை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், ஒரு வாரமாக வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளதாகவும், மழை நீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனைக் கண்டித்து, ராமேஸ்வரம் சாலையில் சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல், தூத்துக்குடி அம்பேத்கர் நகரிலும், மழைநீர் அகற்றப்படாததைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.