தியாகத்தலைவி சின்னம்மா நீடூழி வாழ வேண்டி நீலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு
Jan 18 2021 7:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தியாகத்தலைவி சின்னம்மா நீடூழி வாழ வேண்டி, சென்னை நீலாங்கரையிலுள்ள நீலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல் ஆரோக்கியத்துடன், நீடூழி வாழ வேண்டி, நீலாங்கரையில் உள்ள நீலகண்டேஸ்வரர் திருக்கோயிலில், தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் நீலாங்கரை திரு.M.C. முனுசாமி தலைமையில் கழக நிர்வாகிகள் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதிக் கழகச் செயலாளர் செம்மஞ்சேரி திரு.V. குணசேகரன், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளர் மடிப்பாக்கம் திரு.S. ராஜேந்திரன், வேளச்சேரி பகுதிக் கழகச் செயலாளர் திரு.M. சந்திரபோஸ், வேளச்சேரி பகுதி வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு.P.G. மதன்குமார், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் திரு.கார்த்திக், வேளச்சேரி பகுதி மகளிரணி செயலாளர் விஜயலதா சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.