கிருஷ்ணகிரியில் சாதிக்கொடுமை படுத்தி வரும் நபர்களிடமிருந்து 250 குடும்பங்களை காப்பாற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
Jan 18 2021 7:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, சாதி ரீதியாக கொடுமை படுத்தி வரும் நபர்களிடமிருந்து, 250 குடும்பங்களை காப்பாற்றக்கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். பார்வதிபுரம் என்ற கிராமத்தில், இலங்கையில் இருந்து குடிபெயர்ந்த 250-க்கும் மேற்பட்ட மக்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்களை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் சாதி ரீதியாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.