புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் : தமிழகம் முழுவதும் அ.ம.மு.க.வினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
Jan 17 2021 5:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. வெங்கடாசலம் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது. இதேபோல ஆவணிப்பேரூர் கீழ்முகம் கிராமம் போடிநாயக்கன்பட்டியில் சேலம் புறநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் திரு. பி.ஏ.ராஜேந்திரன் தலைமையில் எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
புதுக்கோட்டையில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு எம்ஜிஆர் சிலை வந்தடைந்த கழக நிர்வாகிகள், எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நகரச் செயலாளர் மற்றும் தொகுதி பொறுப்பாளர் திரு. வீரமணி, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கந்தர்வக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.S.R.முருகேசன் தலைமையில் எம்ஜிஆர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் நகர கழகம் சார்பில் பேருந்து நிலையம் எதிரே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நகர செயலாளர் திரு. Msk முப்பிடாதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் திரு.பவுன் குருசாமி, மாவட்ட அம்மா தொழிற்சங்க இணை செயலாளர் திரு.முருகராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.