தமிழகத்தில் இரண்டாம் நாளாக இன்றும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்கிறது - மாநிலம் முழுவதும் 166 மையங்கள் மூலம் ஏற்பாடு
Jan 17 2021 3:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் இரண்டாம் நாளாக இன்றும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. 166 மையங்கள் மூலம் இந்த பணி நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் நேற்று தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக, 166 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மதுரையில், 3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள், 3 சுகாதாரப் பணியாளர்கள், 3 மருத்துவ ஊழியர்கள் என, 20 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதேபோல் திருச்சி, ஈரோடு, ராமநாதபுரம், தருமபுரி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி பணி நடைபெற்றது. இரண்டாம் நாளாக இன்றும் இந்தப் பணி நடைபெறுகிறது. 166 மையங்கள் மூலம் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இணைந்து செயலாற்றி வருகின்றனர்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி உமாமகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.