தடுப்பூசி போட்டுக்கொண்டார் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் - கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டும் பாதுகாப்பானவை என உறுதி
Jan 17 2021 2:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன் திருச்சியில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை என திரு.ராதாகிருஷ்ணன் அப்போது உறுதியளித்தார்.
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை ஆய்வு செய்த சுகாதாரத் துறைச் செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன், தானும் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இதுவரை எந்தவித பக்க விளைவும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார். கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை எனத் தெரிவித்த அவர், தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் முகக்கவசம் அணிய வேண்டியது அவசியமென கூறினார்.