சட்டமன்றத் தேர்தல் அறிக்கை குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் : அ.ம.மு.க முன்னணி நிர்வாகிகள் பங்கேற்று ஆலோசனை
Nov 28 2020 4:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்கான ஆய்வு மற்றும் தேர்தல் குறித்த அம்மா மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகிகள் பங்கேற்ற கருத்துக்கேட்பு கூட்டம் கோவையில் நடைபெற்றது.
கோவை மதுக்கரை ஒன்றியக் கழகம் சார்பில், மதுக்கரை நாசிக்கில் உள்ள தனியார் திருமண அரங்கில் இக்கூட்டம் நடைபெற்றது. கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.P. பழனியப்பன், கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.C.சண்முகவேலு, கழக அமைப்புச் செயலாளர்கள் திரு.சேலஞ்சர் துரை, டாக்டர் இல.கதிர்காமு, தேனாடு திரு.T. லட்சுமணன் உட்பட, கோவை கிழக்கு, கோவை மேற்கு மற்றும் தெற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சட்டமன்றத் தேர்தல் களப்பணிகள், பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.