ராமேஸ்வரத்தில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகப் புகார் - 97 விசைப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதிச்சீட்டு ரத்து
Nov 28 2020 4:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 97 விசைப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதிச்சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று காலை ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் ஆயத்தமாகி மீன்வளத்துறை அதிகாரிகளிடம், அனுமதிச் சீட்டு பெற சென்றனர். அப்போது, குறிப்பிட்ட இந்த 97 படகுகளும் கடந்த முறை மீன்பிடிக்க சென்றபோது, சர்வதேச கடல் எல்லையை தாண்டி அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பிற்குள் சென்று மீன் பிடித்ததாகவும், இதனால் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.