பணியின்போது மரணமடையும் அரசு ஊழியர்களுக்கான இழப்பீடு : மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க உத்தரவு
Nov 28 2020 4:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பணியின்போது மரணமடையும் அரசு ஊழியர்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கும் விவகாரத்தில், மத்திய அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மதுரையை சேர்ந்த புஷ்பவனம் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர், மத்திய அரசுத் தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், மனுவின் மீது உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் கூறி, வழக்கை ஒத்திவைத்தனர்.