பெரம்பலூர் - அரியலூர் சாலையில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் பலி
Nov 28 2020 4:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரம்பலூர் - அரியலூர் சாலையில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே பழுதாகி நின்றுகொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதே போன்று லாரி - இருசக்கர வாகனம் மோதிய மற்றொரு விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கவுல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பலியானார். பெரம்பலூரில் அருமடல் பிரிவு ரோடு அருகே மினி பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் டூவீலரில் வந்த பீல்வாடி கிராமத்தை சேர்ந்த கனகராஜ் என்பவர் உயிரிழந்தார்.