துணைவேந்தர் சூரப்பா மீதான பல கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு - மின்னஞ்சல் புகார்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை
Nov 28 2020 2:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் திரு.சூரப்பா மீதான 280 கோடி ரூபாய் ஊழல் விவகாரத்தில், மின்னஞ்சலில் வந்துள்ள புகார்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் திரு.சூரப்பா, 280 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்தப் புகார்கள் தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் அலுவலகம் அமைக்கப்பட்டு திரு.கலையரசன் விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே, சூரப்பா மீது மின்னஞ்சலில் வந்துள்ள புகார்கள் குறித்து திரு.கலையரசன் விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்தப் புகார்கள் உண்மையாக இருந்து ஆதாரங்கள் இருந்தால் சூரப்பாவிடம் நேரில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.