மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை சேர்க்கக்‍ கோரி வழக்‍கு - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விரைவில் விசாரணை

Nov 28 2020 12:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

2020-21 ம் ஆண்டிற்கான மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை சேர்க்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த வாசுதேவா என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 2020-21 ஆம் ஆண்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் தமிழகத்தில் புதிதாக துவக்கப்பட உள்ள ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட 11 அரசு மருத்துவ கல்லூரிகள் சேர்க்கப்படும் என தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்ததை அவர் தனது மனுவில் சுட்டிக்‍காட்டியுள்ளார். தற்போது கலந்தாய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகள், கலந்தாய்வு பட்டியலில் சேர்க்கப்படவில்லை எனக்‍ குறிப்பிட்டுள்ளார். 11 அரசு மருத்துவ கல்லூரிகளை கலந்தாய்வு பட்டியலில் சேர்த்தால், மருத்துவ படிப்பிற்கான இட ஒதுக்கீடு சதவீதம் அதிகரிக்கும், இதனால் பல மாணவர்கள் பயனடைவார்கள் என தெரிவித்துள்ள அவர், புயல் காரணமாக மருத்துவ கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகளை கலந்தாய்வில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00