கொரோனா தடை உத்தரவுகள் மேலும் தளர்த்தப்படுமா? - தமிழக அரசு இன்று முக்கிய ஆலோசனை
Nov 28 2020 11:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தளர்வுகள் குறித்து மேலும் அறிவிப்புகளை வெளியிடுவது பற்றி தமிழக அரசு இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் வீரியம் குறைந்து வருகிறது. இந்த நிலையில், தொற்று பரவலை மேலும் கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது. நவம்பர் 30ம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அது குறித்து மாவட்ட ஆட்சியர், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டங்களில், டிசம்பர் மாத ஊரடங்கு தொடர்பாகவும் முதலமைச்சர் விவாதிக்க உள்ளார். குறிப்பாக பள்ளிகள் திறப்பு குறித்த ஆலோசனையும் கூட்டத்தில் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.