வைகை ஆற்றின் தடுப்பணைகளில் நிரம்பிய நீர் - ஆள் உயரத்திற்கு பொங்கி எழும் நுரை
Nov 28 2020 11:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் இரவு முழுவதிலும் பெய்த மழையால் வைகை ஆற்றின் தடுப்பணைகளில் நீர் நிரம்பிய நிலையில், ஆளுயரத்தில் நுரை பொங்கி காட்சியளிப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மதுரை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதிலும் இரவு முழுவதிலும் பெய்த மழை காரணமாக வைகை ஆற்றில் மழை நீர் வர தொடங்கியது. மதுரை யானைக்கல் பகுதியில் உள்ள தடுப்பணைகள் மழைநீரால் நிரம்பிய நிலையில் தண்ணீர் நிரம்பி தரைப்பாலத்தில் தண்ணீர் ஓட தொடங்கியுள்ளது. மேலும் தடுப்பணையில் உள்ள நீரில் முழுவதிலுமாக நுரை பொங்கி காட்சியளிப்பதோடு, வைகை ஆற்றோர பகுதிகளான செல்லூர், மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளிலும் ஆளுயரத்திற்கு நுரை பொங்கி நிற்பதால் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். கழிவு நீர் மற்றும் ரசாயன கழிவுகள் ஆற்றில் கலப்பதன் காரணமாக நீர் பொங்கி நுரையாக காட்சியளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.