மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது - பாலாற்றங்கரை தரைப்பாலம் மூடப்பட்டு 50க்‍கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு

Nov 28 2020 11:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுராந்தகம் அருகே உள்ள பாலாற்றங்கரை தரை பாலம் வெள்ளப்பெருக்கு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டதால் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் ஈசூர் மற்றும் வல்லிபுரம் இடையே பாலாற்றுக்கு தரைப்பாலம் உள்ளது. இந்த தரைபாலத்தில் தண்ணீர்வரத்து அதிகரித்து வருவதால் எந்த நேரத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்கின்ற நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தரைப்பாலம் தற்காலிகமாக மூடப்பட்டது. ஈசூர் மற்றும் வள்ளிபுரம் ஆகிய இரு கிராம பகுதியில் பாலாற்றுக்கு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இவ்வழியாக மேலவலம்பேட்டை, அரையபாக்கம், பூதூர், ஈசூர், வள்ளிபுரம் திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் போன்ற இடங்களுக்குச் செல்லும் வழிகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதியில் உள்ளோர் 20 கிலோ மீட்டர் சுற்றி செல்ல செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00