மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் கோரி வழக்கு : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
Nov 27 2020 6:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாற்றுத்திறனாளிகள் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டோருக்கு என சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்க கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மாவட்டந்தோறும் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதற்கு சாய்வு தளங்கள் போன்ற வசதிகளுடன் கூடிய சிறப்பு நீதிமன்றமும், அவர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு அரசு வழக்கறிஞர்களையும் நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.