ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம்
Nov 27 2020 6:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டத்தில், கொரோனா அச்சத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 8 மாதங்களுக்கு பிறகு நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், ராமநாதபுரம் ஆட்சியர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பேசிய அவர், வடகிழக்கு பருவமழையால் மாவட்டத்திலுள்ள கண்மாய்கள் நிரம்பியுள்ளதாக தெரிவித்தார்.