திருத்தணி நந்தி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட முதியவரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்பு
Nov 27 2020 6:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருத்தணி நந்தி ஆற்றின் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 70 வயது முதியவரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். திருத்தணி நேரு நகரைச் சேர்ந்த ரவி என்ற 70 வயது முதியவர், நந்தி ஆற்றிற்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, அவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதைக் கண்ட பொதுமக்கள், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த முதியவரை பத்திரமாக மீட்டனர்.