வங்கக்கடலில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - தமிழகம் - புதுச்சேரியில் வரும் 1ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Nov 27 2020 12:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வரும் ஒன்றாம் தேதி முதல் 3-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என கூறியுள்ளது.
நிவர் புயல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்றும், இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஒன்றாம் தேதி முதல், 3-ம் தேதி வரை மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.