கோயம்பேட்டில் சிறு, குறு வியாபாரிகளுக்கு அனுமதி மறுப்பு - ஆயுத பூஜை பொருட்கள் விற்பனையின்றி வெறிச்சோடியது
Oct 24 2020 2:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை கோயம்பேடு சந்தையில் சிறு, குறு சில்லறை வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்படாததால் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழகத்தில் ஆயுத பூஜை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இல்லங்கள், அலுவலகங்களில் மலர்கள், பழ வகைகள், வாழைக்கன்று, மாவிலைத்தோரணம், மஞ்சள் கிழங்கு, அவல், பொரி என இறைவனுக்கு படைப்பது வழக்கம். இவை அத்தனையும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால், பொதுமக்கள் கோயம்பேடு சந்தையையே அதிகம் நாடுவர். இந்த ஆண்டு கொரோனா பரவல் அச்சம் காரணமாக, கோயம்பேடு சந்தையில் சிறு, குறு கடைகள் மூடப்பட்டு, சுமார் 200 மொத்த காய்கறி அங்காடி மட்டுமே செயல்பட்டு வருகிறது. ஆயுதப்பூஜைக்கு முதல்நாள் எப்போதும் கூட்டம் களைகட்டும் கோயம்பேடு சந்தை இன்று வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் சிறு குறு, சில்லறை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.