கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்து, வரும் 28-ம் தேதி தமிழக அரசு ஆலோசனை - மாவட்ட ஆட்சியர், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு
Oct 24 2020 11:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில், கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது மற்றும் சுகாதார நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் வரும் 28-ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.
கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி, வரும் 28-ம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளார். மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். சினிமா தியேட்டர்கள் திறப்பது, புறநகர் ரயில்களை இயக்குவது மற்றும் தடுப்பூசி நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.