பெண்களை அவதூறாக பேசியதாக எழுந்துள்ள புகார் - திருமாவளவன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

Oct 24 2020 11:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

பெண்களை தரக்குறைவாக பேசிய புகாரில், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளன் மீது, 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பாரிமுனையைச் சேர்ந்த திரு. அஸ்வத்தாமன் என்பவர், சென்னை காவல் ஆணையருக்கு, ஆன்லைனில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், திருமாவளவன் இந்துப் பெண்களை தரக்குறைவாக விமர்சித்து, கருத்துக்களை வெளியிட்டதாக புகார் தெரிவித்திருந்தார். அவருடைய கருத்து, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும், கலவரத்தைத் தூண்டி, சட்டம் ஒழுங்குபிரச்னையை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக திரு. அஸ்வத்தாமன் தனது புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், திருமாவளவன் மீது, அவதூறு கருத்துக்கள் வெளியிட்டு பொது அமைதிக்க பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள திருமாவளவன், மகளிரை மனு நூலே கொச்சைப் படுத்துவதாகவும், அதனைச் சுட்டிக்காட்டியதற்காகவே தன்மீது பழி சுமத்தி, அவதூறு பரப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00