உ.பி.யில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் - உ.பி. அரசை கலைக்கக்கோரி திருச்சியில் ஆர்ப்பாட்டம்
Oct 21 2020 4:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, மக்கள் அதிகாரம் அமைப்பினர், திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளுக்கு ஆதரவாக அம்மாநில அரசும், காவல்துறையும் செயல்படுவதாக குற்றம்சாட்டியும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும், கோஷங்கள் எழுப்பப்பட்டன.