திருவள்ளூர் அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை உறவினர்களே திருடிச்சென்று மோசடியாக பத்திரப்பதிவு - மீட்டுத்தரக்கோரி பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார்
Oct 21 2020 11:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூரை அடுத்த மணவாளன் நகரை சேர்ந்த பைனான்சியரின் வீட்டிலிருந்த ஆவணங்களை திருடி, அவரது உறவினர்களே ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை பெயர் மாற்றம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணவாள நகர் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்ற பைனான்சியர், அண்மையில் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது சகோதரியும், சகோதரியின் கணவரும் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். சின தினங்களுக்கு பின் வீட்டின் பீரோவை திறந்து பார்த்த, மோகன்ராஜின் மனைவி பத்மாவதி, அதிலிருந்த சொத்து ஆவணங்கள் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து சார் பதிவாளர் அலுவலகத்தில் சென்று விசாரித்த போது, மோகன்ராஜின் பெயரில் இருந்த சொத்துகள் அனைத்தும், அவரது சகோதரியின் மகன் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, பத்மாவதி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.