திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் கட்டுமானப் பணியின்போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு
Oct 20 2020 5:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில், மின்சாரம் தாக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருமுல்லைவாயல் சோழன் நகரில் வசித்து வந்த மாடசாமி என்பவர் வீ்ட்டில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. மாடி படிக்கட்டு அமைக்க குழி தோண்டும்போது மின்வயர் சேதமாகி மின்சாரம் தாக்கியதில், மேஸ்திரி ஜெய்சங்கர், வீட்டின் உரிமையாளர் மாடசாமி ஆகிய இருவரும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.