டிப்ளமோ மாணவர்களுக்கு அரியர் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒரு முறை கால அவகாசம் வழங்கி, தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை அறிவுறுத்தல்

Oct 20 2020 2:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

டிப்ளமோ மாணவர்களின் நலன் கருதி, அவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த வசதியாக மேலும் ஒரு முறை கால அவகாசம் வழங்கி, தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த தேவதுரை என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பாலிடெக்னிக் படித்து வரும் தான் சில பாடங்களில் தோல்வி அடைந்ததால் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்திருந்ததாகவும் கரோனா ஊரடங்கால் அதன் முடிவு தாமதமானதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால், அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் முடிந்து விட்டது எனவும் தன்னை அரியர் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், மறு மதிப்பீடு முடிவு வருவதற்கு முன்பே, அரியர் தேர்வுக்கான கட்டணம் செலுத்த கால அவகாசம் முடிந்து விட்டதாகவும் எனவே, மாணவரின் நலன் கருதி அரியர் பாடங்களுக்கான, தேர்வு கட்டணத்தை செலுத்த மேலும் ஒரு கடைசி வாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார். மனுதாரர் மட்டுமல்லாது அனைத்து மாணவர்களின் நலன் கருதி, இதேபோன்ற நிலையில் உள்ள மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒரு முறை கால அவகாசம் வழங்கி மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00